×

கட்சிமாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியிருக்கிறார் குஷ்பு : மகிளா காங்கிரஸ் தலைவி பதிலடி

சென்னை, :தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஆர்.சுதா வெளியிட்ட அறிக்கை:கட்சிமாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் பேரியக்கம்  மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியிருக்கிறார் குஷ்பு. காங்கிரசில் இணைந்தபோது என்னென்ன மரியாதை எல்லாம் தரப்பட்டது என்பது நினைவிருக்கிறதா? ஆனால், பத்தோடு பதினொன்றாக உங்களை இணைத்த கட்சிக்காகவா தொண்டர்களின் இயக்கமான காங்கிரசை பழிக்கிறீர்கள்? எல்லா காலகட்டத்திலும் எங்களை போன்றவர்களின் உழைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கிறதே தவிர ஒதுக்கியதில்லை, ஒடுக்கியதில்லை.

சில மேகங்கள் விலகும்போது வானம் இன்னும் அழகாகவே காட்சி தரும். துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு ஆறு ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததை மனசாட்சியோடு நினைவுகூர்ந்து விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளவேண்டும். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாக கூற விரும்புகிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Khushbu ,Mahila Congress , Khushbu, Mahila Congress, Leader, Retaliation
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...