லக்னோ: ஹத்ராஸ் சம்பவத்தில் சிபிஐ, எஸ்பிஐ விசாரிக்க உத்தரவிட கோரிய மனுக்கள் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணையை மாற்ற வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்த நிலையில் விசாரணையில் பிரச்சனை என்றால் அலகாபாத் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.