சென்னை: குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாகன உதிரி பாகங்கள் வாங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்து துறை ஆணையர் விதித்த நிபந்தனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.