×

மாபியா கும்பலின் பிடியில் இளம்பெண்கள் : சென்னையில் விபச்சார விடுதிகளாக மாறிய மசாஜ் சென்டர்கள்: வறுமையை பயன்படுத்தி கற்பை விலை பேசும் கும்பல்

சென்னை, :மசாஜ் சென்டர்கள் என்றாலே ஒரு காலத்தில் எங்கேயாவது ஒரே ஒரு இடத்தில் வைத்து தகுதி வாய்ந்த நபர்களை வைத்து அல்லது நன்கு மசாஜ் செய்யக்கூடிய அனுபவம் உள்ள நபர்களை வைத்து மசாஜ் செய்து வந்தனர். அங்கு சென்று மசாஜ் செய்வதற்கு முன் கூட்டியே அனுமதி பெற வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. ஏனென்றால் அந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் வருவார்கள். காலப்போக்கில் மசாஜ் சென்டர்களில் பெண்கள் அனுமதிக்கப்பட்டு தற்போது அது பாலியல் தொழில் நடக்கும் இடமாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு மசாஜ் சென்டர்கள் அதிகரிப்பும், அதில் நடக்கும் முறைகேடுகளும் நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வருகின்றன.

 தற்பொழுது சென்னையில் உள்ள மசாஜ் சென்டர்களில் 90% மசாஜ் சென்டர்கள் பாலியல் தொழில் ரீதியாகவே நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 10 சதவீதம் மசாஜ் சென்டர்களில் முறையான அனுமதியுடன் எந்தவித சலசலப்புக்கும் இடம் கொடுக்காமல் முறையாக மசாஜ் செய்து வருகின்றனர். மீதமுள்ள இந்த 90 சதவீதம் சென்டர்கள்  ஆன்லைன் வழியாகவும், வாட்ஸ்அப் வழியாகவும் இயங்கிவருகின்றன. அந்த வகையில் ஒரு கஸ்டமர் தனக்கு மசாஜ் வேண்டும் என்று விரும்பினால் அதற்கு என்று ஒரு வெப்சைட் உள்ளது.
(www.locanto.com) அந்த வெப்சைட்டில் சென்று வாடிக்கையாளர்கள் தாங்கள்  இருக்கும் இடத்தின் லோக்கேஷனை பதிவு செய்தால் கஸ்டமர் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் எந்த மசாஜ் சென்டர் உள்ளது என்பது தெரியவரும்.

சம்பந்தப்பட்ட அந்த மசாஜ் சென்டரை தொடர்பு கொண்டு பேசினால் ஒரு பெண்  போன் எடுத்துப் பேசுவார்கள் அவர்கள் மசாஜ் சென்டரில் இருக்க மாட்டார்கள் ஆனால் போனை அட்டென்ட் செய்வது மட்டுமே அவர்கள் வேலை. அவர்கள் கஸ்டமர் இருக்கும் இடத்தின்  அருகாமையில் உள்ள மசாஜ் சென்டருக்கு  செல்லும்படி அறிவுறுத்துவார்கள் மேலும் என்னென்ன ஆப்பர் உள்ளது எந்த வகையான மசாஜ் வேண்டும் என்பது குறித்தும் தெளிவாகக் கூறுவார்கள் ஆயிரம் ரூபாயில் இருந்து ஏழாயிரம் ரூபாய் வரை மசாஜ் உள்ளது என்று கூறினாலே  கஸ்டமர்கள் புரிந்துகொள்வார்கள். இங்கு  சகலமும் கிடைக்கும் என்று அந்தளவிற்கு மசாஜ் சென்டர்களும் அவர்களது பேச்சு குறியீடுகளும் தகவல் பரிமாற்றமும் எளிதாக வாடிக்கையாளர்களுக்கு புரிந்து விடுகின்றது.  

மசாஜ் சென்டர்களில் தற்பொழுது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் நான்கு வகையாக தங்களது மசாஜ் வகைகளை பிரித்து வைத்துள்ளனர். பேசிக் எனப்படும் வகையில் 500 ரூபாயில் தொடங்கி அதன் பிறகு ஹேப்பி எண்டிங். பாடி டு பாடி. நியூடு என ஃபுல் சர்வீஸ் என ஐந்து வகையாக பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் தரம் பிரித்து வைத்துள்ளனர் இதில் பேசிக் எனப்படும் மசாஜ் ஜெல்.ஆயில். பவுடர் என மூன்று வகைகளில் மசாஜ் செய்வார்கள் இதில் கஸ்டமர் எதை தேர்வு செய்கிறாரோ அதை வைத்து மசாஜ் செய்து விடுவார்கள் இவ்வாறு மசாஜ் செய்யும்போது 500 ரூபாயிலிருந்து 1500 வரை பெறப்படுகிறது. அதன் பிறகு ஹேப்பி எண்டிங்.பாடி டு பாடி. நியூடு. புல் சர்வீஸ் இதுபோன்ற மசாஜ் களில் பெரும்பாலும் பாலியல் சம்பந்தப்பட்ட பல வேலைகள் நடைபெறுகின்றன. புல் சர்வீஸ் எனப்படும் பிரிவில் 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
இந்தப் பிரிவில் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் மசாஜ் செய்யும் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர்.

பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்யும் பெண்கள், ஹாஸ்டலில் தங்கி வேலை செய்யும் பெண்கள் என பெரும்பாலானோர் வீட்டில் தாங்கள் பியூட்டி பார்லரில் வேலை செய்வதாகக் கூறிக் கொண்டு மசாஜ் சென்டரில் வேலை செய்கின்றனர்.  ஆரம்பத்தில் வெறும் மசாஜ் செய்ய மட்டும் கற்றுத் தரும் இந்த பெண்களுக்கு நாளடைவில் கமிஷன் தொகை மற்றும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி பாலியல் தொழிலில் உட்படுத்த செய்கின்றனர் மேலும் தங்கும் இடத்திலேயே பாதுகாப்புடன் இருப்பதால் இவர்களும் இதில் ஈடுபட  சம்மதிக்கின்றனர் பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் கணவனால் கைவிடப் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள் குழந்தைகளைப் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கும் பெண்களே அதிகமாக மூளைச்சலவை செய்து மசாஜ் சென்டர்களில் பயன்படுத்தப்படுகின்றனர்.

இவர்களுக்கு என்று தனியாக ஒரு ஏஜென்ட் உள்ளார் அவர்களை மீறி யாரும் மசாஜ் சென்டர்களில் வேலை செய்ய முடியாது அந்தளவிற்கு நெட்வொர்க் வைத்து ஏஜெண்டுகள் செயல்பட்டு வருகின்றனர்.  ஆன்லைனில் புக் செய்வது முதல் வாட்ஸ் அப் குரூப் பயன்படுத்துவது வரை அனைத்தையும் ஏஜென்டுகள்  பின் தொடர்ந்து வருகின்றனர் ஒரு கஸ்டமர் உள்ளே சென்று வெளியே வரும்போது அவர் தரும் டிப்ஸ் மட்டுமே அந்தப் பெண்களுக்கு முழுவதுமாக சென்று சேரும் மற்றபடி   பெண்களுக்கு எவ்வளவு ஊதியம்  என்பது அன்றைக்கு வரும் கஸ்டமர்களை பொறுத்தே அமையும்.  ஒரு காலகட்டத்தில் வடமாநில பெண்கள் மட்டுமே அதிகமாக ஈடுபடுத்தப்பட்ட வந்த இந்த தொழிலில்  தற்போது தமிழகத்தை சேர்ந்த பல பெண்கள் மசாஜ் சென்டர்களில் பணிபுரிந்து வருகின்றனர் குறிப்பாக வெளியூரைச் சேர்ந்த பல பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் காரணம் நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் கூறுகின்றனர்.

சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் இயங்கி வந்தன ஆனால் தற்பொழுது கொரோனா  தொற்று பாதிப்பினால் பல பெண்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் 200க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் மூடப்பட்டுள்ளன சென்னையில் மசாஜ் சென்டர் உள்ளிட்ட விபச்சாரம் சம்பந்தமாக குற்றங்களை தடுக்க ஏவிஎஸ் எனப்படும் விபச்சார தடுப்பு பிரிவு என்ற ஒரு பிரிவு  போலீசாரால் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து மசாஜ் சென்டர்கள் உள்ளிட்ட தங்கும் விடுதிகளை கண்காணித்து வருகின்றனர் சென்னையில் நார்த் வெஸ்ட் ஒரு பிரிவாகவும். ஈஸ்ட்.  சவுத் ஒரு பிரிவாகவும் விபச்சார தடுப்பு பிரிவு 2இன்ஸ்பெக்டர்களால் கண்கானிக்கபட்டு வருகிறது.   இந்த விபசார தடுப்பு பிரிவில் பணியாற்ற பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் முட்டி மோதுவர்  ஏனென்றால் வேலையும் குறைவு குறிப்பிட்ட ஒவ்வொரு மசாஜ் சென்டர்கள் லாட்ஜுகள் என அனைத்திலிருந்தும் மாதாமாதம் வர வேண்டிய மாமுலும்  சரியாக வந்துவிடும் அதனால் இன்ஸ்பெக்டர் மத்தியில் ஏவிஎஸ் என்றாலே ஒரு விதமான குஷியில் இருப்பார்கள் தற்போது சென்னையில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களில்  குடும்பப்பெண்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வந்துள்ளது

முதலில் பியூட்டி பார்லர் என்று அழைத்து அதன் பின்பு ஏற்கனவே அங்கு பணியில் உள்ள பெண்கள் தினமும் 2,000 ரூபாய் 3 ரூபாய் என எடுத்துச் செல்கிறார்கள் நீ எப்படி உள்ளாய் எனக்கூறி மூளை சலவை செய்து பல குடும்பப் பெண்களையும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து மசாஜ் சென்டரில் பணிபுரியும் வேலூரைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில் சென்னையில் நாங்கள் எங்கு வேலைக்கு சென்றாலும் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வரும்  ஆனால் அங்கும் எங்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் உள்ளன.  
உயர் அதிகாரிகள் முதல் உடன் வேலை செய்பவர்கள் வரை எங்களை தவறான நோக்கத்தில் சிலர் பார்க்கின்றனர்  அதற்கு இந்த தொழிலை செய்யலாம் என இந்த தொழிலுக்கு வந்து விட்டேன் வேலூரில் எனது குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள் நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றேன். எந்த வித பிரச்சினையும் இல்லை அப்பப்ப காவல் துறையைச் சேர்ந்த நண்பர்களும் வருவார்கள் அவர்களை  திருப்திபடுத்த வேண்டும் மற்றபடி எந்த பிரச்சனை வந்தாலும்  எங்களது ஏஜென்ட் பார்த்துக்கொள்வார் என தெரிவித்தார்.

மேலும் மசாஜ் சென்டரில் பணிபுரியும் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில் நாங்கள் தெரிந்தே இந்த வேலைக்கு வரவில்லை ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 2000 ரூபாய் வரை கிடைக்கிறது தற்போது எனக்கு 35 வயதாகிறது அதிகபட்சம் இன்னும் என்னால் ஐந்து வருடங்கள் மட்டுமே என்னை கஸ்டமர்கள் லைக்  செய்வார்கள் அதற்குள் கணவன் இல்லாத நான் லைஃபில் செட்டில் ஆக வேண்டும் வேறு வழியில்லை எனது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.இவ்வாறு மசாஜ் சென்டரில் பணிபுரியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால்  ஒரு சோகக் கதை உள்ளது ஒருநாளைக்கு தங்களது உடலை விற்று பிழைப்பு நடத்தும் பெண்கள் 2,000 ரூபாயில் இருந்து மூன்று ரூபாய் வரை எடுத்துச் செல்கின்றனர்.  

அவர்களை வேலை வாங்கும் ஏஜென்ட்கள் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் கண்டிப்பாக ஒவ்வொரு மசாஜ் சென்டரில் இருந்தும்  சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 30,000 ரூபாய் வரை கப்பம் கட்ட வேண்டும் அது மட்டுமில்லாமல் காவலர்கள் வந்தால் அவர்களையும்  திருப்திப்படுத்த வேண்டும் இவ்வாறு பல கண்டிஷன்கள் உள்ளன அதுமட்டுமில்லாமல் ஏவிஎஸ் எனப்படும் விபச்சாரத் தடுப்புப் பிரிவுக்கு மாதம் ஒரு தொகையை செலுத்த வேண்டும் இவ்வாறு சென்னையில் உள்ள மசாஜ் சென்டர்கள் போலீசாருடன் ஒருவிதமான புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில்  செயல்பட்டு தங்களது தொழிலை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற  விபச்சார தடுப்புப் பிரிவு  போலீஸ் உயரதிகாரி கூறுகையில் ஒரு காலத்தில் விபச்சார தடுப்பு பிரிவு பார்த்தாலே பாலியல் தொழிலில்  ஈடுபடும் பெண்கள் அஞ்சுவார்கள் ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது ஹோட்டலில் சென்று ரெய்டு செய்தாலும் நானும் இவரும் நண்பர்கள் எங்களது சந்தோசத்திற்காக இங்கு வந்தோம் எங்களுக்குள் எந்த ஒரு பண பரிமாற்றமும்  நடக்கவில்லை என ஓபனாக சுற்றுகின்றனர்  அந்த அளவிற்கு அவர்களுக்கு சட்டம் துணை நிற்கின்றது இதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை குறைந்தபட்சம் மசாஜ் சென்டர்களை  ரைட் செய்து சம்பந்தப்பட்ட பெண்களிடமே புகாரை பெற்று மசாஜ் சென்டரில் முதலாளி வற்புறுத்தினார் அல்லது கஸ்டமர்களுக்கு  நாங்கள் மசாஜ்  செய்து கொண்டிருந்தோம்.

அப்போது கஸ்டமர்கள் எங்களை பாலியல் தொழிலுக்கு அழைத்தார்கள் என்று கூறி வந்த கஸ்டமர் மீது வழக்குப்பதிவு  செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது மேலும் தற்போது மசாஜ் சென்டர்களில் பெண்களை கைது செய்து காப்பகத்தில் ஒப்படைத்தால்  அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் வெளியே வந்து வேறு  மசாஜ் சென்டரில் வேலைக்கு சேர்ந்து தங்களது தொழிலை செவ்வனே செய்து வருகின்றனர்.
இவ்வாறுதான் தற்போது சென்னையில் மசாஜ் சென்டர்களின் நிலைமை உள்ளது இதை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்

அதிகாரம் யாருக்கு?

பெரும்பாலான மசாஜ் சென்டர்கள் பிரைவட் எண்டர்பிரைசஸ்  என்ற  பெயரிலே பதிவு செய்யப்படுகின்றன இதனால் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் தவறு நடந்தாலும் அதை உடனடியாக கேட்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து மாநகராட்சி மூலமே நோட்டீஸ் அனுப்பி உங்களுக்கு முறையான அங்கீகாரம் உள்ளதா என கேட்கின்றனர் அவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய உடன் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர்கள் உடனடியாக காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விடுகின்றன இதனால் மசாஜ் சென்டர்கள் விஷயத்தில் ஒரு தெளிவான நடைமுறை இல்லை என்பதால் பாலியல் தொழில் மிக எளிமையாக நடந்து வருகிறது மாநிலத்துக்கு ஏற்றார்போல் ரேட் பிக்சிங் ஒவ்வொரு மசாஜ் சென்டரிலும்  நார்த் இண்டியன் ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் என ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த பெண்களும் தனித்தனியாக நிற்க்க வைக்க படுகின்றனர்.  கஸ்டமர்கள் உள்ளே சென்றவுடன் அவர்களை தேர்வு செய்யவேண்டும் ஒவ்வொருவருக்கும் ஒரு ரேட் என ரூல்ஸ் உள்ளது.

ஆண்கள் பாவம்

பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் போலீசார் ரெய்டு நடக்கும் பொழுது மசாஜ் சென்டர்களில் பணிபுரியும் பெண்கள் காப்பகத்தில் அனுப்பப்படுகிறார்கள் அங்கு சென்ற ஆண்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப் படுகிறார்கள் தங்களை வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மசாஜ் சென்டரில் பணிபுரிந்த பெண்களிடம் போலீசார் புகார் பெற்று இவ்வாறு செய்கின்றனர் இந்தப் போக்கு சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மசாஜ் சென்டரை நடத்தி வரும் நபர்களை தப்ப விட்டு விட்டு அதன் பிறகு அவர்களை கோர்ட்டில் சென்று முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படியும் போலீசார் அறிவுறுத்துகின்றனர் இதற்கெல்லாம் அவர்கள் மாதாமாதம் செலுத்தும் கட்டிங் தான் காரணம் என கூறப்படுகிறது.

Tags : women ,brothels ,mafia gang ,Massage centers ,Chennai ,gang , Mafia, Teens, Brothel, Massage Centers
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...