×

கணவன் தற்கொலை

ஆவடி: ஆவடி, அண்ணாமலை நகர், 5வது தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (25). இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மதிமா (22). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.
இதற்கிடையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஐயப்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதிமா பிரிந்து சென்று தாய்வீட்டில் உள்ளார். இதையடுத்து ஐயப்பன் பலமுறை சென்று மனைவி மதிமாவிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்து பெற்றோர் வீட்டில் இருந்து விட்டார். இதனால், கடந்த சில நாட்களாக ஐயப்பன் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று காலை ஐயப்பன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Tags : suicide , Husband commits suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை