×

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்டரம்பாக்கம் காலனி, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (43). கூலி தொழிலாளி. குடி பழக்கம் உடையவர். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மகேந்திரன், காலனி சுடுகாடு செல்லும் வழியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மகேந்திரனின் இளைய மகன் பழனி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலனி சுடுகாடு செல்லும் வழியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மகன் இறந்த துக்கத்தில், 2 ஆண்டுகளாக மகேந்திரன், மன வேதனையில் இருந்தார். இதனால், அதே மின் கம்பத் தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர்.

Tags : suicide ,death , Father commits suicide by mourning son's death
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை