×

தாம்பரம் நகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி முறைகேடுகளை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் நகராட்சியில் நடைபெறும் ஒப்பந்த முறைகேடு, லஞ்சம், ஊழல் மற்றும் முடங்கிப்போன பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தி தாம்பரம் திமுக சார்பில் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன்ண எம்எல்ஏ கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில், காமராஜ், ஆதிமாறன், செல்வகுமார், வேல்மணி, கருணாகரன், குறிஞ்சி சிவா, ஜோதிகுமார், பாரதி, ஹரிஷ் (எ) அன்பு, ஹரிஷ் குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : protests ,DMK ,Tambaram ,municipality , DMK protests against irregularities in Tambaram municipality
× RELATED திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர்...