×

தெலங்கானாவில் பலத்த மழை: 5 விமானங்கள் சென்னை வந்தன

சென்னை: டெல்லியிலிருந்து 129 பேருடன் நேற்று ஐதராபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஜெய்ப்பூரிலிருந்து 117 பயணிகளுடன் ஐதராபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், வாரணாசியிலிருந்து 129 பயணிகளுடன் ஐதராபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மும்பையிலிருந்து 115 பயணிகளுடன் ஐதராபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கொல்கத்தாவிலிருந்து 117 பயணிகளுடன் ஐதராபாத் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆகிய 5 விமானங்கள் பலத்த மழை காரணமாக அங்கு தரையிறங்க முடியவில்லை.எனவே, நேற்று முன்தினம் இரவு 9.30 மணியிலிருந்து இரவு 10.45 மணி வரை ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் வந்து தரையிறங்கின.


Tags : flights ,Telangana ,Chennai , Heavy rains in Telangana: 5 flights arrived in Chennai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...