×

பாதுகாப்பு வழிமுறை பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ.2.65 கோடி அபராதம்

சென்னை: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.2.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு 13ம் தேதி மட்டும் ரூ.5.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை மொத்தம் ரூ.2.65 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Companies , Companies fined Rs 2.65 crore for non-compliance
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...