×

கொரோனா டெஸ்ட் எடுக்க சென்ற களப்பணியாளர் மீது சரமாரி தாக்குதல்: வியாபாரி உட்பட 7 பேர் மீது வழக்கு

பெரம்பூர்: அயனாவரம் சிவலிங்கம் தெருவை சேர்ந்தவர் சிவா(44). இவர் சென்னை மாநகராட்சி மண்டலம் 8ல் 97வது வார்டில் களப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அயனாவரம் முத்தம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று அங்கு இருந்த கடையின் உரிமையாளர் சதீஷ்குமார் (எ) சரவணன் என்பவரிடம், “உங்கள் கடையில் உள்ளவர்கள் மற்றும் நீங்கள் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என கூறினார். அதற்கு, சரவணன் மறுத்து சிவாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்றி சரவணன் மற்றும் அவரது கடையில் வேலை செய்த ஊழியர்கள் சேர்ந்து சிவாவை கடுமையாக தாக்கினர். புகாரின்பேரில் அயனாவரம் போலீசார்  சரவணன் மற்றும் கடை ஊழியர்கள் 7 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Tags : field worker ,Volleyball attack ,dealer , Volleyball attack on a field worker who went to take a corona test: Case against 7 people including a dealer
× RELATED உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி