×

கொரோனா விதிமுறை மீறும் ரயில் பயணிகளுக்கு சிறை

புதுடெல்லி: கொரோனா பரவலைத் தொடர்ந்து ரயில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதன்படி ரயிலில் பயணிக்க வரும் பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், அதை முறையாக அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகள் வரவிருப்பதால் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமலோ அல்லது கொரோனா பாசிட்டிவ் உடன் ரயிலில் பயணித்தாலோ சட்டப்பிரிவு 145, 153 மற்றும் 154 ஆகியவற்றின் கீழ் அபராதம் மற்றும் அதிகபட்சம் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் நேற்று எச்சரித்துள்ளனர்.

Tags : train passengers ,Corona , Jail for train passengers violating Corona rules
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...