தருமபுரி: தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என தருமபுரியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு கொரோனா பரவியது என கூறினார். எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.