×

தெலங்கானாவில் 10 வீடுகள் கொண்ட காம்பவுண்ட் சுவர் மீது ராட்சத பாறை சரிந்து விழுந்து விபத்து : 2 மாத கைக்குழந்தை உட்பட 9 பேர் பலி

திருமலை, தெலங்கானாவில் விடியவிடிய பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஆந்திர வடக்குப்பகுதி மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் பலத்த சூறாவளி வீசியது.  நேற்று மாலை முதல் தெலங்கானா மாநிலத்தில் கனமழை பெய்யத்தொடங்கியது. விடியவிடிய இன்று 2வது நாளாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத் ஓல்டுசிட்டி பகுதியில் உள்ள முகமதியான் ஹில்ஸ் பகுதியில் உள்ள 10 வீடுகள் கொண்ட காம்பவுண்ட் சுவர் மீது ராட்சத பாறை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 மாத கைக்குழந்தை உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்தனர்.இதுதவிர மாநிலத்தில் ஆங்காங்கே வீடுகள் இடிந்ததில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags : houses ,Telangana ,infant , Telangana, houses, wall, giant rock
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...