×

அசாமில் 73 வயது மருத்துவரை அடித்து கொல்லப்பட்ட வழக்கு : 25 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பு

கவுகாத்தி,:அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவர் தேபன் தத்தா என்பவர், தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஆக. 31ம் தேதி மருத்துவர் தேபன் தத்தா தொழிலாளர் ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது, அந்த தொழிலாளர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் தத்தாவை கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில், 25 பேர் குற்றவாளிகள் என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை குறித்த விவரம் வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : Assam ,doctor ,death , Assam, prosecutor, convicted
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...