மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷின் ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சிபிஐ வசம் உள்ளதால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியதால் ஜாமின் மனு மீதான விசாரணை நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.