×

காரைக்காலில் மூதாட்டி வீட்டில் திருடிய பெண் கைது: 12 ½ பவுன் நகை பறிமுதல்

காரைக்கால்: காரைக்காலில் மூதாட்டி வீட்டில், பனிரண்டரை பவுன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம்  இருந்து நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால் திருவேட்டக்குடி காலனி தெருவில் வசிப்பவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பவுனம்மாள் (67). இவரது வீட்டுக்கு  அடிக்கடி வந்து செல்லும் வரிச்சிக்குடி சோனியா காந்தி நகரை சேர்ந்த பாத்திமா(27) என்பவர், வழக்கம் போல், கடந்த 10ம் தேதி  சென்றபோது, தான் குளிக்க வேண்டும். நீ கிளம்பு என பாத்திமாவை பவுனம்மாள் அனுப்பி வைத்துள்ளார். பாத்திமா கிளம்புவது  போல், கிளம்பி, பிறகு மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து, பவுனம்மாள் குளிக்க செல்லும் முன், கழுட்டி வைத்த பனிரண்டரை பவுன் தங்க  நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கத்தை பாத்திமா திருடிகொண்டு தலைமறைவாகிவிட்டார். திருடப்பட்ட நகைகளின்  மதிப்பு ரூ. 5.50 லட்சமாகும்.

பவுனம்மாள் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது குறித்து, கோட்டுச்சேரி காவல்நிலையத்தில்  புகார் கொடுர்த்தார். அதன்பேரில், கோட்டுச்சேரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு  செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர். விசாரணையின் ஓர் பகுதியாக, அன்றைய தினம் வீட்டுக்கு வந்துச் சென்ற  பாத்திமாவையும் போலீசார் தேடினர். ஆனால், பாத்திமா வீட்டில் இல்லை.இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், போலீசார் நேற்று மீண்டும் பாத்திமா வீட்டுக்கு சென்றபோது, கை நிறைய பணத்துடன்  எங்கோ கிளம்பியதை கண்டு, போலீசார் பாத்திமாவை மடக்கி பிடித்து விசாரித்தபோது, உண்மையை பாத்திமா ஒப்புகொண்டார்.  

மேலும், திருடிய நகைகளை, காரைக்காலில் உள்ள ஒரு நகைக்கடையில், ரூ.2.50 லட்சத்திற்கு விற்றுவிட்டு, அந்த பணத்தின்  பாதியில் தனக்கு தேவையான நகை மற்றும் வெள்ளி கொலுசுகளை வாங்கிகொண்டு, மீதி பணத்துடன் தலைமறைவானது  தெரியவந்தது.தொடர்ந்து, பாத்திமாவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் பணம், ஒரு செல்போனை போலீசார்  மீட்டனர். பின்னர், குறிப்பிட்ட நகை கடையிலிருந்து திருடிய பனிரண்டரை பவுன் நகையையும் போலீசார் மீட்டனர். மேலும்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : house ,jewelery ,Karaikal , Woman arrested for stealing grandmother's house in Karaikal: 12 pound jewelery confiscated
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்