×

காவேரிப்பாக்கம் அருகே பயங்கரம் காஞ்சிபுரம் கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை: 3 பேரை பிடித்து தனிப்படை விசாரணை

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே கட்டிட மேஸ்திரி அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து  தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த பொய்கை நல்லூர் மக்ளியன் கால்வாய் அருகே 40 வயது மதிக்கத்த நபர் அடித்து  கொலை செய்யப்பட்டிருப்பதாக அவளூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.அதன்பேரில் ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனன், அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர்  லட்சுமிபதி, சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக விஏஓ உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள்  லட்சுமிபதி(காவேரிப்பாக்கம்), பாரதி(பாணாவரம்), ஜெயபிரகாஷ் (சோளிங்கர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள்  அமைத்து  எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டார். முதற்கட்டமாக சுேரஷின் சொந்த ஊரைச் சேர்ந்த 3 பேரை  சந்தேகத்தின்பேரில் பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சடலமாக மீட்கப்பட்டவர்  காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியை சேர்ந்த சுரேஷ்(40),  கட்டிட மேஸ்திரி  என்பது தெரியவந்தது. அவரது மனைவி காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த  சித்ரா(34). இவர்களுக்கு 14  வயதில் மகன், 13 வயதில் மகள் உள்ளனர். கணவன்,  மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ தொடங்கி  உள்ளனர்.

சுரேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில், ரத்த கரையுடன் கட்டுக்கல், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் உட்பட மது அருந்தியதற்கான  தடயங்கள் சிக்கியது. இதனால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், அவருடன் மது அருந்தியவர்கள் அடித்து கொலை  செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தெரியவில்லை. தற்போது 3 பேரிடம்  சந்தேகத்தின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. முழுமையான  விசாரணைக்கு பிறகுதான் விவரங்கள் தெரியவரும்’ என்றனர்.கட்டிட மேஸ்திரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : building ,Kanchipuram ,murder ,investigation ,Kaveripakkam , Kanchipuram building masterminded murder near Kaveripakkam: 3 arrested and private investigation
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...