×

நீலகிரியில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. யானை வழித்தடங்களில் சட்ட விரோத கட்டுமானங்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

Tags : building hotels ,restaurants ,Supreme Court ,Nilgiris , Nilgiris, Elephant Route, Accommodation, Restaurants, Ban
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...