விழுப்புரம் : தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்று பாலம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உள்பட் 13 பேர் காயமடைந்தனர். பேருந்தின் முன்பகுதி உடைந்து சேதமடைந்தன. விபத்து குறித்து தகவலறிந்து நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவலர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.