×

தொழிலாளி வீட்டில் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புங்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ்(37). கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மேலும், இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு தனது அண்ணன் வீட்டில் பெண் குழந்தையை விட்டு விட்டு பயிற்சி வகுப்பிற்காக சென்றிருந்தார். பின்னர் மாலை வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 2 சவரன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், டிவி மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Worker home robbery
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி