×

வனக்காப்பாளர்கள் 170 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: தமிழக வனத்துறையில் 8 ஆண்டு காலம் பணி முடித்து உரிய தகுதிகளுடன் உள்ள வனக்காப்பாளர்கள் 170 நபர்களுக்கு வனவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக வனத்துறையில் வனக்காப்பாளர் பதவியில் 8 ஆண்டு காலம் பணி முடித்து உரிய தகுதிகளுடன் உள்ள வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு வழங்க துறைத் தேர்வுக் குழுமம் அமைக்கப்பட்டு தகுதியுள்ள வனக்காப்பாளர்கள் 170 நபர்களுக்கு வனவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : forest rangers , Promotion of 170 forest rangers
× RELATED பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம்...