×

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பாஜ நிர்வாகி போக்சோவில் கைது

செங்கல்பட்டு: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ நிர்வாகியை, போலீசார் போக்சோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த தெள்ளிமேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மறைமலைநகர் மற்றும் மகேந்திரா சிட்டியில் பணிபுரிவோர் வசிக்கின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில்  வெங்கடாபுரத்தை சேர்ந்த லிங்கேசன் (52) என்பவர், காவலாளியாக பணியாற்றுகிறார். மேலும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பாஜ விவசாய அணி நிர்வாகியாக  உள்ளார்.

இந்நிலையில் லிங்கேசன் நேற்று முன்தினம், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு  அளித்துள்ளார். இதைக்கண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், அவருக்கு தர்ம அடி கொடுத்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் அமுதா, பாஜ நிர்வாகி லிங்கேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தார். சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜ நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : executive ,BJP ,girls , BJP executive arrested for sexually harassing girls in Pokcho
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...