×

2 மாதங்களுக்கு பின் 55 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 2 மாதங்களுக்கு பிறகு குறைந்து 55,342 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக 55,342பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் மொத்தம் 71.75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஐந்தாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 18ம் தேதிக்கு பின்னர் முதல் முறையாக கொரோனா தொற்று எண்ணிக்கையானது நேற்று 55 ஆயிரமாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 706 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு 1,09,856 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 62,27,296 பேர் இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்னும் 8,38,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : exposure ,Corona , Corona exposure reduced to 55,000 after 2 months
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...