கோவை: லஞ்சம் பெற்றதாக மேட்டுப்பாளையம் பெண் சார்-பதிவாளர் உள்பட 8 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சோதனையில் ரூ.2.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூ.2.25 பணம் பறிமுதல் செய்த நிலையில் இன்று வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.