×

நெகிழ வைத்த தோனியின் தீவிரமான ரசிகர்: கடலூரில் 1.5 லட்ச ரூபாய் செலவு செய்து வீட்டை மஞ்சள் நிறமாக மாற்றிய இளைஞன்..!!

துபாய்: துபாயில் நடைபெற்று வரும் 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. சென்னை அணியின் தோனி உள்பட  அணியின் வீரர்கள் அனைவரும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். இதனால் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனையடுத்து அவரது வீட்டிற்கு ஜார்கண்ட் மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் தோனியின் தீவிரமான ரசிகர் ஒருவர் தனது வீட்டை ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து மஞ்சள் நிறத்திற்கு மாற்றியுள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்ற பகுதியை அடுத்த அரங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். துபாயில் பணிபுரிந்து வரும் தோனியின் தீவிரமான ரசிகரான இவர், தோனி மீதான தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் தனது வீட்டை ஒன்றரை லட்சம் செலவு செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து உள்ளார்.

அதுமட்டுமின்றி வீட்டின் சுவர்களில் தோனியின் உருவப் படங்களையும் வரைந்து விசில் போடு என்ற வாசகம் வைத்துள்ளார். மேலும் இதில் தோனியின் ரசிகர் வீடு என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற வீரர்களின் ஆட்டமும் சிறப்பாக இல்லை என்றாலும் அந்த அணியின் ரசிகர்கள் கொஞ்சம்கூட மாறவில்லை என்பதை இத்தகைய செயல் தெரிவிக்கிறது.

Tags : Dhoni ,Cuddalore , Dhoni, fan
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...