சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 22-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு, தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர் நலத்துறை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணி மாறுதல் உள்ளிட்ட கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.