எர்ணாகுளம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சுங்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளதால் ஸ்வப்னா தற்போது சிறையில் இருந்து வெளிவர முடியாது.