×

சிலுவம்பாளையத்தில் முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது: ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு.!!!

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தவுசாயம்மாள் இன்று  அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 93. தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலக்ஷ்மி என்ற மகளும் உள்ளனர். அவரது உடலுக்கு அவரது மகனும் தமிழக  முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அத்துடன் உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, சிலுவம்பாளையத்தில் முதல்வர் தாயார் தவுசாயம்மாள் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. முகக்கவசம் அணிந்து உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.  சிலுவம்பாளையத்தில் உள்ள மையானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

தலைவர்கள் இரங்கல்:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமக தலைவர் சரத்குமார், தமாக தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் முருகன்,  விசிக தலைவர் திருமாவளவன்,  கராத்தே தியாகராஜன், கி.வீரமணி உள்ளிட்டவர்களும் முதல்வரின் தயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினி காந்த் உள்ளிட்டோர் தொலைபேசியில் முதல்வர் பழனிசாமியை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.


Tags : Palanisamy ,Thavusayammal ,funeral , Chief Minister Palanisamy's mother Thavusayammal's body was cremated at Chiluvampalayam: Many people attended the funeral !!!
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...