×

இந்தியாவில் கடந்த 63 நாளில் முதல்முறையாக பாதிப்பும் உயிரிழப்பும் குறைவு.. கடந்த 24 மணி நேரத்தில் 55,342 பேருக்கு கொரோனா.. 706 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 63 நாளில் முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது. எனினும் உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. பாதிப்பும் அதிகமாக உள்ளது.

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.09 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 71 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக   பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக  55,342 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,75,881 ஆக உயர்ந்தது.
* புதிதாக  706 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,09,856 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 77,760  பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 62,27,296 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,38,729  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 86.78% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.53% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 11.69% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 10,73,014 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 8,89,45,107 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Tags : India , India, for the first time, vulnerability, casualties
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...