மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா, கணவர் ராஜகோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தர்ணாவில் ஈடுபட்டதையடுத்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மயிலாடுதுறை போலீஸ் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.