×

மறைந்த தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் முதல்வர் பழனிசாமி...

சேலம் :  மறைந்த தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடலுக்கு உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி, அதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் தவுசாயம்மாள் இன்று அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 93. தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலக்ஷ்மி என்ற மகளும் உள்ளனர். அவரது உடலுக்கு அவரது மகனும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அத்துடன் உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சிலுவம்பாளையத்தில் இன்று காலை 9 மணியளவில் தவுசாயம்மாள் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. தனது தாயாரின் இறப்பையடுத்து, முதல்வரின் ஆய்வு சுற்றுப்பயணங்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய இடங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Palanisamy , Mother, body, tears Malka, tribute, paid, Chief Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...