×

பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம், ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் ஜி.பாலசுப்பிரமனியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இ.தேவி, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் பரமேஸ்வரி கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் என்.பி.மாரிமுத்து, வி.கன்னியப்பன், பி.டில்லிகுமார், கே.சுரேஷ்குமார், யமுனா ரமேஷ், உமாமகேஸ்வரி சங்கர், பிரியா செல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், பத்மாவதி கண்ணன், சிவகாமி சுரேஷ் சத்யபிரியா முரளிகிருஷ்ணனன், கேஜிடி.கௌதமன் வி.கண்ணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 15 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் தங்களது பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஒன்றிய பொது நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தும், ஏற்கனவே ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.92 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 15 ஒன்றியக் குழு உறுப்பினர்களின பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை தேர்வு செய்து மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Poonamallee Union Committee Meeting , Poonamallee Union Committee Meeting
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்