செய்யூர்: செய்யூர் தாலுகா சூனாம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தரணீஸ்வரி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சூனாம்பேடு பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவச முகவசம் வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள், வணிகர்கள், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு கொரோனா நோய் பரவல் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.