×

கருக்குப்பேட்டை பகுதியில் சர்வதேச குழந்தைகள் தின விழா: மாவட்ட எஸ்.பி பங்கேற்பு

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவன மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சர்வதேச குழந்தைகள் தின விழா வாலாஜாபாத் அடுத்த கருக்கு பேட்டை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன சைல்டு லைன் இயக்குனர் சாமிநாதன் தலைமை தாங்கினார் . காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கலந்துகொண்டு குழந்தைகளின் பாதுகாப்பு குழந்தைகளின் உரிமைகள் குழந்தைகளை எவ்வாறு பெற்றோர்கள் பாதுகாப்போடு வளர்க்க வேண்டும் என்பது குறித்து குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் விளக்கிப் பேசினார்.
 இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொலைபேசி எண் சுவரொட்டி  அறிமுகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் பயிற்சி வைஷ்ணவி தொண்டு நிறுவன குழந்தைகள் பாதுகாப்பு மேலாளர் பத்மா,
பிரேம்ஆனந்த், காவல்  ஆய்வாளர் மகேஸ்வரி உட்பட தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் தன்னார்வலர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.வாலாஜாபாத் அடுத்த கருக்கு பேட்டையில் நடந்த சர்வதேச குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா குழந்தைகளுக்கான தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Tags : area ,Karukkupet ,District SP , International Children's Day Celebration in Karukkupet area: District SP participation
× RELATED ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன்...