×

நிர்பயா ஏவுகணை சோதனை நிறுத்தம்

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஒடிசாவின் பாலசோரில் இருந்து நேற்று நிர்பயா ஏவுகணை சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஏவுகணை சுமார் 1000கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு சோதனை மையத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட இருந்த கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், நிர்பயா ஏவுகணை சோதனை உடனடியாக நிறுத்தப்பட்டது.

Tags : Nirbhaya missile test stop
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...