×

குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய நாணயம் அகற்றம்

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் ஒரு வயது பெண் குழந்தை, நேற்று முன்தினம் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு வந்தனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது, உணவுக்குழாயில் நாணயம் சிக்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் சுமார் 2 மணி நேரம் போராடி, அறுவை சிகிச்சையின்றி சிறிய டியூப் செலுத்தி நாணயத்தை வெளியில் எடுத்தனர்.

Tags : Removal ,baby , Removal of coin trapped in baby's esophagus
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...