×

சிவகாசி அருகே சேதமடைந்த தச்சகுடி-நிறைமதி சாலை: பொதுமக்கள் அவதி

சிவகாசி: சிவகாசி அருகே தச்சகுடி-நிறைமதி சாலை சேதமடைந்திருப்பதால் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சுற்றி ஏராளமான விவசாய கிராமங்களும் உள்ளன. எம்.புதுப்பட்டியை தாய் கிராமமாக கொண்டு 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அதிகபடியாக விவசாயம் மட்டுமே உள்ளது. இந்த விவசாய கிராமங்களில் சாலைகள் பெரும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக தச்சகுடி-நிறைமதி சாலை முற்றிலும் சேதமடைந்து வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

விவசாய வாகனங்கள் விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்த சாலையில் சுமார் 2கிலோ மீட்டர் தூரம் டூவீலர்கள் கூட செல்லமுடியாத நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றன. எனவே சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,suffering ,Sivakasi , Damaged Tachakudi-Niramathi road near Sivakasi: Public suffering
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...