×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.35 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 7,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,35,315-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 165 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 40,514-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 12,81,896 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 2,12,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , In Maharashtra, 7,089 people were diagnosed with corona infection in a single day today
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி