×

ராசிபுரத்தில் 12, 13 வயது குழந்தையை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 75 முதியவர் உள்பட 6 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 12 மற்றும் 13 வயதான சிறுமிகளை 6 மாதமாக வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவர் உட்பட 6 பேர் போக்சோவில் கைது செய்துள்ளனர். முத்துசாமி(75), சிவா(26), சூர்யா(23), சண்முகம்(45), மணிகண்டன்(30), செந்தமிழ்செல்வம்(31) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.  இதையடுத்து 75 வயது முதியவர் உட்பட 7 பேரை ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமிகள் இருவரையும் 7 பேர் 6 மாதகாலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Rasipuram , In Rasipuram, 12, 13 year old, child, sexual abuse, 6 arrested
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து