மதுரை: கேரளா போன்று தமிழகத்திலும் தனியார் விவசாயப்பணியில் 100 நாள் வேலை பணியாளர்களை ஏன் பயன்படுத்தக்கூடாது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் தவறாக செயல்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது.