×

பீகாரில் புதைத்த சடலத்தில் தலை ‘மிஸ்சிங்’... உறவினர்கள், கிராம மக்கள் போராட்டம்!!

பாட்னா, : பீகார் மாநிலம் பார்சோய் அடுத்த அபாத்பூர் பகுதியைச் சேர்ந்த மங்கலு (65) என்பவர் கடந்த 7ம் தேதி உடல்நலம் பாதிப்பால் இறந்தார். அவர்களின் குடும்ப வழக்கப்படி கிராமத்திற்கு அருகிலுள்ள கல்லறையில் மங்லுவை அடக்கம் செய்தனர். அடுத்த நாள், மங்கலூவின் மகன் முகமது பைக் தனது தந்தையின் கல்லறைக்கு ஃபாத்திஹா துவாவைப் படிக்கச் சென்றபோது, ​​அந்த இடத்தின் மண் சிதைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் ஆகியோர் சந்தேகமடைந்த நிலையில், கல்லறை குழியை மீண்டும் தோண்டினர். அப்போது, இறந்தவரின் உடலில் இருந்த அவரது தலையை மட்டும் காணவில்லை.

அதிர்ச்சியடைந்த அவர்கள், ‘உடலில் இருந்து தலையை மட்டும் வெட்டி எடுத்து சென்றது யார்?’ என்று ஆவேசப்பட்டு அபத்பூர்-பார்சோய் பிரதான சாலையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அபத்பூர் காவல் நிலைய அதிகாரி பிரேம்நாத் ராம் கூறுகையில், ‘பஜித்பூரில் வசிக்கும் ஜஹாங்கிரின் தந்தை மஹ்புஸ் அலி என்பவர் சம்பவ நாளன்று தனது சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கல்லறைக்கு அருகிலுள்ள மதுராபூர் பாலம் அருகே மீன்பிடிக்கும் சிலரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இறந்த மங்லுவின் குடும்பத்தினர் ஜஹாங்கிர் மீது குற்றம் சாட்டி உள்ளனர். அதனால், சிலரிடம் விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Tags : Bihar ,Relatives , Bihar, head, missing, relatives, villagers, struggle
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!