திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலின் பெரியநம்பி, பூசாரி உட்பட 12 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 9ம்தேதி முதல் வரும் 15ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயிலின் தினசரி பூஜைகளை கவனித்துக் கொள்ள, தந்திரி சரணநெல்லூர் சதீசன் நம்பூதிரிபாடு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், வரும் 15ம் தேதி முதல் நடக்க இருந்த ஐப்பசி திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, பங்குனி திருவிழாவும் கொரோனாவால் மாற்றி வைக்கப்பட்டது. பின்னர், அது கடந்த மாதம் எளிமையாக நடத்தப்பட்டது.