×

பந்தை எறிவதாக நரைன் மீது புகார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆல் ரவுண்டர் சுனில் நரைன், தனது பந்துவீச்சின்போது ஐசிசி விதிமுறைகளுக்குப் புறம்பாக பந்தை எறிவதாக கள நடுவர்கள் உல்லாஸ் காந்தி, கிறிஸ் கபானி புகார் செய்துள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியுடன் அபுதாபியில் நடந்த லீக் ஆட்டத்தில் அவர் இவ்வாறு பந்தை எறிந்ததாக புகார் எழுந்துள்ளது. மீண்டும் இது போன்ற சர்ச்சையில் சிக்கும்பட்சத்தில், நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச நரைனுக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.  இதற்கு முன்பும் அவர் பந்தை எறிவதாக பல முறை புகாருக்கு உள்ளாகி தடையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Narine , Complained to Narine of throwing the ball
× RELATED சுனில் நரைன் அதிரடி சதம் கொல்கத்தா 223 ரன் குவிப்பு