சென்னை : தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை: திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். வழக்கின் இறுதியில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆகவே அரசு சட்டத்
திலும் சில திருத்தங்களை கொண்டு வரவேண்டும். சிறுமிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த வன்கொடுமைகளை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்.