×

நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா தொற்று உறுதி: ட்வீட்டரில் பதிவு

நேபாளம்: நேபாள சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளாம் கொரோன வைரஸ் தொற்று இல்லாத நாடு என கடந்த 8 மாதங்களுக்கு முன்பு யோகேஷ் பத்தராய் அறிவித்து இருந்த நிலையில், அவருக்கே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் யோகேஷ் பத்தராய் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் எனக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், முடிவுகள் நெகட்டிவ் என்றே வந்தன. இதனால், காத்மாண்டுக்கு வெளியே பல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டேன். அந்த சமயத்தில் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மீண்டும் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒருவாரத்தில் என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளர்.

Tags : Corona ,Yogesh Bhattarai ,Nepal , Nepal, Tourism Minister Yogesh Bhattarai, Corona
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!