சென்னை: சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணையை நாளை சிபிசிஐடி போலீஸ் தொடங்குகிறது. ஈஞ்சம்பாக்கத்தில் சங்கர் தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து உதவிய விஜயாவிடம் சிபிசிஐடி போலீசார் நாளை விசாரணை நடத்துகின்றனர். சம்மன் அனுப்பியதன் பேரில் நாளை காலை 10 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் 2-ம் கட்ட விசாரணைக்கு விஜயா ஆஜராகிறார்.