சென்னை: தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் தலைமையில்தான் தேசியக்கட்சி கூட்டணி அமைக்க முடியும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் இதுதான் நடைபெற்று உள்ளது. பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.