×

மெய்நிகர் ஐபிஎல் கிரிக்கெட் ட்ரீம் லெவன் போட்டியில் 1 கோடி வென்ற வாலிபர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பில்  பகுதியை ேசர்ந்தவர் கே.எம்.ராஸிக். இவர் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம்  லெவன்’  விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்றுள்ளார்.  ஐபிஎல்.லில் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் 2  அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை  தேர்ந்தெடுத்து ‘ட்ரீம்  லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி  விளையாடப்படுகிறது. இதில், நிஜ அணியின் வீரர்கள் அடித்த ரன்கள்,  விக்கெட்டுகள் மற்றும்  பவுண்டரிகளின் அடிப்படையில், ‘ட்ரீம் லெவன்’  ஆன்-லைன் போட்டியில் விளையாடுபவருக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -  சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை ஒட்டி, ராஸிக் ‘ட்ரீம் லெவன்’  ஆன்-லைன்  கிரிக்கெட் போட்டியில் வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இதில்  ராஸிக்கின் ‘ட்ரீம் லெவன்’ அணி 790.5 புள்ளிகளுடன்  முதலிடம் பிடித்தது. இந்தியாவுக்கு  உள்ளேயும், வெளியேயும் ‘ட்ரீம் லெவல்’ ஆன்-லைனில் போட்டியிட்ட 55  லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை தாண்டி, ராஸிக் இந்த  சாதனையை பெற்று  வெற்றிக்கனியை பறித்துள்ளார். கண்ணூர் ஏகேஜி  மருத்துவமனையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் இவருக்கு ₹30 லட்சம்  வரி போக, மீதமுள்ள ₹70 லட்சம் தொகை கிடைக்கும்.




Tags : youngster ,match ,IPL , Virtual IPL cricket The young man who won 1 crore in the Dream Eleven competition
× RELATED ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன்...