×

தொழிலதிபர் வீட்டில் 50 லட்சம் கொள்ளை

சென்னை: திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்தவர் அருண் பாலாஜி, தொழிலதிபர். திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை எடுக்க சென்றபோது,  அது மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு ெசய்து விசாரித்தனர். அதில், சமீபத்தில் அருண்  பாலாஜி வீட்டில் பெயின்டிங் வேலை செய்த விழுப்புரத்தை சேர்ந்த 2 பேர் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.



Tags : robbery ,businessman ,house , 50 lakh robbery at businessman's house
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்