×

புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் அமைக்க வேண்டும்: முதல்வர் நாராயணசாமி பேச்சு

காரைக்கால்: புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் அமைக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.காரைக்கால் பைபாஸ் சாலை அரசு விளையாட்டு திடல் எதிரே 19.61 கோடி மதிப்பில்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக திறப்பு விழா நடந்தது.   சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாகி, சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், சுப்பையா மற்றும் பலர் பங்கேற்றனர்.
காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரியில் இளம் வழக்கறிஞர்களுக்கு  வழங்கப்படும் உதவித் தொகை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு  பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் அமைக்க வேண்டும் என்றார்.

Tags : Chennai High Court ,Narayanasamy ,Pondicherry , In Puducherry Chennai High Court bench should be set up: Chief Minister Narayanasamy's speech
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...